கொரோனா நோய்த்தாக்கத்தில் இருந்து இலங்கை மற்றும் உலக மக்களை பாதுகாக்க கோரி இன்று மாலை 05.45 மணிக்கு வவுனியா மடுக்கந்த சிறி தலதா விகாரையில் விசேட வழிபாடு இடம்பெற்றது.
விகாராதிபதி மூவ அட்டகம ஆனந்த தேரர் தலைமையில் இடம்பெற்ற இவ்விசேட வழிபாட்டில்நாடாளுமன்ற உறுப்பினர்களான கு.திலீபன், காதர் மஸ்தான் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் காஞ்சனகுமார, வன்னி பிரதி காவற்துறை மா அதிபர் லால் செனவிரத்ன போன்ற பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறைந்த அளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டதோடு சமூக இடைவெளியும் பின்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.