மேல் மாகாணத்தில்கொரோனா உச்சம்;நேற்று மாத்திரம்1393 பேர் பாதிப்பு!

corona
corona

மேல் மாகாணத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆழ ஊடுருவியுள்ளது.

அங்கு நேற்று மாத்திரம் 1,393 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 434 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 591 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 368 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது எனவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.