மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சோந்த ஆண் ஒருவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனை பிரதேச காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செங்கலடியைச் சேர்ந்த 58 வயதுடைய வோலாட்சி சாமித்தம்பி எப்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளர்.
குறித்த நபர் கடந்த ஏப்ரல் 27 ம் திகதி வீட்டில் இருந்து மோட்டர்சைக்கிளில் வெளியேறிய நிலையில் வீடுதிரும்பாத நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக உறுவினர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று வாழைச்சேனை முறுத்தானை வயலை அண்டிய காட்டுப்பகுதியில் சடலம் ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் இருப்பதாக அந்த பகுதியில் விவசாய நடவடிக்கைக்கு சென்றவர்களால் வாழைச்சேனை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் கடந்த 27 ம் திகதி காணாமல்போன செங்கலடியைச் சேர்ந்தவர் என கண்டறிந்ததையடுத்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.