பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடப்பட்டது

Photo 1 1
Photo 1 1

பண்டாரவளை நகர பொதுச்சந்தை இன்று(09) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இதனால் சுகாதார அதிகாரிகளும், காவல்துறையினரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை சில வியாபாரிகள், அத்துமீறி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பண்டாரவளை மாநகரசபை, பிரதேச செயலக சுகாதார பரிசோதகர்களும், பண்டாரவளை காவல்துறையினரும் இணைந்து அவர்களை திரும்பி அனுப்பியதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.