இரத்தினபுரியிலுள்ள 8 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

earth slip
earth slip

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 8 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, குருவிட்ட, கிரியெல்ல, எலபாத்த, பலாங்கொடை, இம்புல்பே, வெலிகேபொல மற்றும் ஓப்பநாயக்க ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் வாழும் மக்களும், குறித்த பிரதேசங்களில் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.