போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

kaithu

பழைய இரும்பு விற்கும் போர்வையில் வாகனம் ஒன்றில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 590 க்கும் அதிகமான போதை மாத்திரைகள் அடங்கிய பெட்டிகள் மற்றும் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டதாக கல்முனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கல்முனை மாநகர பிரதான வீதியில் நேற்று (09) மாலை சந்தேக நபர் வாகனம் ஒன்றில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடுவதாக மாவட்ட புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடம் அணிந்து சென்ற கல்முனை காவல்துறையினர் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பகுதியில் இருந்து குறித்த போதை மாத்திரைகள் கடத்தி வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.