கந்தளாயில் முகக்கவசம் அணியாதோர் காவல்துறையினரினால் கைது

20210509 193820
20210509 193820

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் முகக்கவசம் அணியாத எட்டுப்பேர் காவல்துறையினரினால் இன்று (10.05.2021) கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கந்தளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் கந்தளாய் பேராறு பகுதியில் இன்று திங்கட்கிழமை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது கந்தளாய் பேராறு, மத்ரஸா நகர் பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் மற்றும் தலைக்கவசம் அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் இவ்வாறு எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியில் முகக்கவசம் அணியாது நின்றவர்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத எட்டு நபர்களை காவல்துறையினர் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றதை காணகூடியதாக இருந்தது.

இச்செயற்பாடு திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து காவல்துறை பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.