வட மாகாண சபையின் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளருக்கான நியமனக்கடிதம் திரு.ராஜேந்திரா சசீலனுக்கு வட மாகாண ஆளுநர் நேற்று காலை வழங்கி வைத்தார்.
அதன் போது கிராம அபிவிருத்தியை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு மக்களுக்கான சேவையில் அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்த ஆளுநர் குறித்த நிகழ்ச்சித்திட்டங்களில் இளைஞர்களின் பங்களிப்பினை எதிர்காலத்தில் அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடினார்.