மட்டக்களப்பில் கஞ்சா கடத்திய சாரதி உட்பட 4 பேர் கைது!

IMG 2622
IMG 2622

மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுவரும் ஒப்பந்தகாரர் கம்பனி ஒன்றிற்கு சொந்தமான வீதி அதிகாரசபை பெயரிடப்பட்ட பிக்கப் ரக வாகனத்தில் கஞ்சா கடத்திய சாரதி உட்பட கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 4 பேரை இன்று செவ்வாய்க்கிழமை (11) மாலை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து கேரளா கஞ்சா மற்றும் பிக்கப்ரக வாகனம் ஒன்று மோட்டார்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பதிவு பொறுப்பதிகாரி பி.கே.பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சிரேஷ்ட அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய மாவட்ட குற்ற விசாரணைப் பதிவு பொறுப்பதிகாரி பண்டார தலைமையில் சப் இன்பெக்டர் பத்திராஜா, விக்கினேஸ்வரராஜா, எச்.எம்.றியாஸ், கமல்ராஜ், ரட்ணாயக்கா, மதுசங்க கொண்ட காவல்துறை குழுவினர் சம்பவதினமான இன்று மாலை திருப்பொருந்துறை பகுதியில் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுவரும் ஒப்பந்தகாரர் கம்பனி ஒன்றிற்கு சொந்தமான வீதி அதிகாரசபை பெயரிடப்பட்ட பிக்கப் ரக வாகனத்தில் 155 கிராம் கேரளகஞ்சாவை கடத்திய சாரதியை கைது செய்தனர்.

கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் ஐவரிடத்தில் இருந்தும் 3 ஆயிரத்து நூறு (3100) மில்லிக்கராம்,கேரளா கஞ்சாவை மீட்டதுடன் கல்லடி திருச்செந்தூர் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட ஐவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 73 கிராம் கஞ்சாவை மீட்டனர்.

அதேவேளை மட்டக்களப்பு திருகோணமலை வீதிச்சந்தியில் மோட்டர்சைக்கிள் ஒன்றில் கஞ்சாவை எடுத்துவந்த ஊறணியைந்சேர்ந்த ஒருவரை 3 ஆயிரத்து 220 மில்லிக்கிராம் (3220) கேரளாக கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இதில் வெவ்வேறு சம்பவங்களில் கேரளகஞ்சா மற்றும் மோட்டர்சைக்கிள் என்று பிக்கப்பரக வாகனம் ஒன்று கையடக்க தொலைபேசிகள் 4 மீட்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட 40 ,38, 31, 36 வயதுகளை கொண்ட நான்குபேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.