ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மை கோரல் பிரிவுகள் மூடப்படுகின்றது

Department of labour
Department of labour

தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தின் மற்றும் பிராந்திய அலுவலகங்களின் ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மை கோரல் பிரிவுகளை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (12) மற்றும் நாளை மறுதினம் (13) குறித்த பிரிவுகள் பொதுமக்களுக்காக மூடப்பட்டிருக்கும் என தொழில் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 இன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.