ரூபா 43 மில்லியன் பணத்தை மோசடி செய்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது!

25870
25870

போலி காசோலைகளை அச்சிட்டு ரூபா 43 மில்லியன் பணத்தை மோசடி செய்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கையில் போலி காசோலைகளை அச்சிட்டு இவ்வாறான பண மோசடி மேற்கொள்ளப்பட்ட முதலாவது பண மோசடி இதுவாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.