வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா!

Corona Virus mutation d614g
Corona Virus mutation d614g

யாழ்ப்பாண மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை (மே 11) கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 18 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 35 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும் வவுனியா மாவட்டத்தில் 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கும் பூவரசம் குளம் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 19 பேருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 14 பேருக்கும் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருவரும் என 35 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 2 பேருக்கும் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தெல்லிப்பழை வைத்திசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள். ஒருவர் காவல்துறை உத்தியோகத்தர்.

வேலணை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நில அளவைகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் நெல்லியடி சந்தைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள்.

நல்லூர் மற்றும் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.