புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று!

corona 1
corona 1

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கி வருகின்ற ஆடை தொழிற்சாலையில்  வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்து முகாமைத்துவம் செய்கின்ற அதிகாரிகள் சுமார் 30 பேர் வரையில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் தற்போது நாட்டில் உள்ள  நடைமுறைகளுக்கு அமைய வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்தாலும் தனிமைப்படுத்தல் செயற்ப்பாடின்றி நேரடியாக கடமையாற்றி வரும் நிலையில்  முல்லைத்தீவு  மாவட்ட சுகாதாரத் துறையினர் இவர்களில்   10 பேருக்கு எழுமாறாக பி சிஆர் பரிசோதனைகள் செய்த வேளையிலேயே அவர்களிடமிருந்து 6 பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையிலே குறித்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சாதாரண பணியாற்றினார் ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனூடாக புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் முகாமைத்துவ ஊழியர்கள் மாத்திரமன்றி பணியாளர்களுக்கும் கொரோனா பரவியுள்ள ஒரு நிலைமை உருவாகியுள்ளது

எனவே  இந்த ஆடை தொழிற்சாலையில் தொடர்புடையவர்கள் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பேணுவதோடு கொரோனா தொற்று அறிகுறிகள் அவர்களிடம் காணப்பட்டால்   அவர்கள் உடனடியாக  சுகாதாரப் பிரிவினரை நாடுமாறு  கோரிக்கை விடுத்துள்ளனர்

இதனைவிட முள்ளியவளை கணுக்கேணி. பகுதியில் ஒருவருக்கும் முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,