ராணுவத்தினரால் நகரப்பகுதி கிருமி தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு!

IMG 20210512 WA0020
IMG 20210512 WA0020

நாடு பூராகவும்  கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் யாழ்  மாவட்டத்தில் தொற்று  பரம்பலை  கட்டுப்படுத்தும் முகமாக யாழ்  நகரப் பகுதியில் மக்கள் அதிகளவில்  ஒன்று கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடு இன்றைய தினம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது .

IMG 20210512 WA0006 1


யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா வின் வழிகாட்டுதலின் கீழ் ராணுவத்தின் 51-வது படைப்பிரிவு தளபதியின் நெறிப்படுத்தலில் ராணுவத்தின்  512வது பிரிகெட் இராணுவத்தினரால் யாழ்ப்பாண நகரப் பகுதி நீர் ஊற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும்  செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

IMG 20210512 WA0017
I


யாழ் நகரில் பொதுமக்கள் அதிகமாக ஒன்றுகூடும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, ஆஸ்பத்திரி வீதி  ஆகிய வீதிகள் இன்று காலை  ராணுவத்தினரால் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கி மருந்துவிசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது
.

யாழ் மாவட்டத்தில் அண்மைய நாட்களில் தொட்டு பெறவில்லை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் ராணுவத்தினரால் இவ்வாறான செயற்பாடு மேற்கொள்ள பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது