நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் திவுலபிட்டிய காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட பள்ளுகாவெல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் அஹங்கம காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட கரதுங்கொட, கோவியாபன, கஹவண்ணகம, தொம்மங்கோட கிராம சேவகர் பிரிவுகளும் ஹம்பரதூவ காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட லணு மோதர பொனவிஸ்டா கட்டுகுருந்த கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.