நாட்டில் மேலும் 42 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு!

thanimai 1
thanimai 1

நாட்டில் மேலும் 42 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் உப்புவௌி காவற்துறை பிரிவிற்குட்பட்ட அந்தகுளம் கிராம சேவகர் பிரிவின் சுஹத மாவத்த மற்றும் சீனன்குடாகாவற்துறை பிரிவிற்குட்பட்ட கவன்திகுடா கிராம சேவகர் பிரிவின் விஜேரத்ன மாவத்த பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட காவற்துறை பிரிவிற்குட்பட்ட போவுவல வடமேற்கு, போவுவல தென்மேற்கு, போவுவல வட மத்திய, போவுவல தென் மத்திய, போவுவல தென் கிழக்கு மற்றும் போவுவல வட கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.