வவுனியாவில் கடந்த 1545 வது நாளாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களிற்கு உலர்உணவுப்பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
சுவிஸ் நாட்டில் வசிக்கும் கோபிநாத் தம்பதிகள் தமது உறவினரான காவியாவின் பிறந்தநாளினை முன்னிட்டு 64 குடும்பங்களிற்கு, குறித்த உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.