மதுபான போத்தல்களுடன் நபரொருவர் கைது

IMG 20210514 WA0043
IMG 20210514 WA0043

பிறப்பிக்கப்படாத ஊரடங்கு நாடு முழுவதும் இன்று அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில்,மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் அதே இடத்தை சேர்ந்த 39 வயது குடும்பஸ்தர் ஒருவர் நட்டாங்கண்டல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

நட்டாங்கண்டல் காவல்துறை பரிசோதகர் விமல வீர அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி குறித்த இடத்திற்கு சிவில் உடையில் சென்ற காவல்துறையினருக்கு மதுபானங்களை விற்கும் போதே குறித்த நபர் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்