வவுனியாவில் 8பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவை சேர்ந்த பலரது பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றது.
அதன் முடிவுகளின் பிரகாரம் வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுது செய்யப்பட்டதுடன், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்த 6 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.