பயணத்தடையின் போது மட்டக்களப்பு முகத்துவாரம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான வியாபாத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை கால் போத்தல் கொண்ட 150 மதுபானப் போத்தல்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டக்களப்பு தலைமையக மது போதை ஒழிப்பு பிரிவினர் சம்பவதினமான நேற்று இரவு பாலைமீன்மடு பிரதேசத்திலுள்ள குறித்த வீடு ஒன்றினை முற்றுகையிட்டனர்.
இதன் போது அங்கு மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 6 கடதாசிப் பெட்டிகளில் இருந்து கால் போத்தல்கள் கொண்ட 150 மதுபானபோத்தல்களை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.