இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 430 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 7,317 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் அதிகமானோர் கடந்த ஏப்ரல் மாதத்தில் அடையாளம் காணப்பட்டனர்.
ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் ஆயிரத்து 805 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளது.
ஆண்டின் இதுவரையில் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானோர் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கொழும்பு மாவட்டத்தில் 1,159 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அச்சம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.