யாழில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் அட்டகாசம்!

6
6

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும் , மோட்டார் சைக்கிள் , துவிச்சக்கர வண்டி,  அலுமாரியில் இருந்த பொருட்கள்  என்பவற்றையும் அடித்து உடைத்து அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளனர். 

54


நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ள நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது 

குறித்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் , வீட்டிலிருந்த இளைஞன் ஒருவரின் தங்க சங்கிலி ஒன்றையும் தாக்குதலாளிகள் கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் , தெரிவிக்கப்படுகின்றது.  
சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளடங்கிய குழு மோட்டார் சைக்கிள்களில் வந்து அட்டகாசம் புரிந்துள்ளனர். 
இதேவேளை குறித்த கும்பல் மது போதையில் அப்பிரதேசத்தில் நீண்ட நேரமாக நின்று அட்டகாசம் புரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.