கிளிநொச்சி மாவட்டத்தில் 42 பேருக்கு கொரோனா

rupavathy
rupavathy

கிளிநொச்சி மாவட்டத்தில் 42 பேர் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

சற்றுமுன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 92 பேர் அடையாளம் காணப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 42 பேர் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் மேலும் இவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கான பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.