இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 2, 275 பேரில் 438 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்ப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 410 பேர், காலி மாவட்டத்தில் 261 பேர், களுத்துறை மாவட்டத் தில் 241 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 179 பேர் , கண்டி மாவட்டத்தில் 138 பேர், கேகாலை மாவட்டத்தில் 89 பேர் , இரத்தினபுரி மாவட்டத்தில் 84 பேர் மாத்தறை மாவட்டத்தில் 46 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 38 பேர், பதுளை மாவட்டத்தில் 29 பேர், முல்லைத்தீவு மாவட்ட த்தில் 24 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 22 பேர் , வவுனியா மாவட்டத்தில் 17 பேர், அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 14 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.