கண்டி – போகம்ரை சிறைச்சாலை கைதிகள், சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்றுகாலை(17.05.2021) முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
குறித்த ஆர்ப்பாட்டமானது, கைதிகளான தமக்கு, கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், தமக்கு விரைவில் பிணை வழங்க வேண்டும் எனவும் கோரியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
சுமார் 40ற்கும் அதிகமான கைதிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.