மாரவில ஆதார வைத்தியசாலையில் 8 வைத்தியர்களுக்கு கொரோனா

21 60a19cca54ab4
21 60a19cca54ab4

மாரவில ஆதார வைத்தியசாலையில் 8 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை அந்த வைத்தியசாலையில் 31 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றிய தாதியர்கள் இருவருக்கு தொற்று ஏற்பட்டதாக கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைக்கு அமைய நேற்று 5 வைத்தியர்கள் உட்பட 20 பேருக்கு தொற்று உறுதியானது.