காரைதீவில் பிரதேச சபை தவிசாளர் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

IMG 20210518 WA0023
IMG 20210518 WA0023

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் காரைதீவில் பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா தொற்று உள்ள நிலையில் சுகாதகர நடைமுறைகளை பின்பற்றி இவ் நிகழ்வு இடம்பெற்றது

இதன் போது இங்கு உரையாற்றிய பிரதேச சபையின் தவிசாளர் அன்று முள்ளிவாயக்களில் பல்வேறு உணர்வுகளுடன் சொல்லொன்னா துயரங்களுடன் உயிர் நீத்த உறவுகளை நாங்கள் கொரோனா காரணமாக வீடுகளில் நினைவு கூறுகின்றோம். நினைவு கூறுவதை மாத்திரம் தான் நாம் தற்போதைய நிலையில் நாம் செய்ய முடியும் உயிர் நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தியடைய பிராத்திக்கிறேன்.