இறுதி யத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக இன்றைய நாளில் உலகம் பூராக வாழ்கின்ற தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகளை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ள நிலைமையிலும் பல்வேறு தடைகளைத் தாண்டியும் பலர் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையிலே இன்று மாலை தமிழரசு கட்சியின் உடைய முக்கியஸ்தர்களில் ஒருவரான பீற்றர் இளஞ்செழியன் அவர்கள் தன்னுடைய வீட்டில் உயிர் இறந்தவர்களுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்திய நிலையில் அவருடைய வீட்டினை இராணுவத்தினர் சூழ்ந்து உள்ளனர் இந்நிலையில் குறித்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது.