பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி

02 5
02 5

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

முள்ளிவாய்க்காலில் தமிழ்த் தேசிய விடுதலைப் போரட்டத்தின் ஆயுதப்பலம் முறியடிக்கப்பட்டு படைக்கலன்கள் மூச்சிழந்தபின்னர் தமிழ் மக்களிடம் இன்று எஞ்சியிருக்கும் வலிமையான ஆயுதங்கள் கண்ணீரும் நினைவுகளும் மட்டும்தான். நாம் வாழ்ந்ததையும் வீழ்ந்ததையும் வரலாறாக வருங்காலத் தலைமுறைகளிடம் கையளிப்போம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தலுக்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில் எங்கள் எல்லோரது வீட்டு முற்றங்களும் முள்ளிவாய்க்கால் முற்றங்கள் ஆகட்டும் என குறிப்பிட்டார்.