சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது

kaithu
kaithu

மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் நேற்று மாலை 6 மணி அளவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் காவல்துறை பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோத மதுபான போத்தல்களை பதுக்கி வைத்திருந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்த நபர் தொடர்பாக மட்டக்களப்பு விசேட குற்றப் பிரிவு உயரதிகாரி தலைமையில் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது