வாகன விபத்துக்கள் மீண்டும் அதிகரிப்பு -அஜித் ரோஹண

ajith rohana1
ajith rohana1

வாகன விபத்துக்களில் மீண்டும் அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நேற்றைய தினத்தில் (18) மாத்திரம் வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதில் 3 பேர் நேற்று (18) இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாகவும், 5 பேர் நேற்று முன்தினம் (17) இடம் பெற்ற விபத்துக்களில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் எனவும் மற்றும் மற்றுமொருவர் சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் அவர் தெரிவித்தார்.

இத்தினங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.