தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் புதிதாக 27 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (19) கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் முடிவுகளின் படி குறித்த தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் கதிரவேல் ஜெ.கணேஷ் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோவுர்ட் சென் ஜோன் டிலரி, நோர்வுட் பிலின்கபொனி, படல்கல, பொகவந்தலாவ டின்சின், செபல்டன், எல்டொப்ஸ் ஆகிய தோட்டங்களில் குறித்த 27 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
புதிய நோயாளர்கள் 27 பேருடன் நெருங்கி பழகியவர்களை சுய தனிமைப்படுத்தி பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.