15 இலட்சம் ரூபா பெறுமதியான ஆடைகளை கொள்ளையிட்ட தொழிற்சாலை ஊழியர்கள்

ajith rohama11
ajith rohama11

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தின் ஆடை தொழிற்சாலை ஒன்றில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆடைகளை கொள்ளையிட்டமை தொடர்பில் குறித்த ஆடை தொழிற்சாலையின் 5 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் ஆடை தொழிற்சாலை ஒன்றில் தைத்து முடிக்கப்பட்டிருந்த 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆடைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 1079 பெண் ஆடைகள் கொள்ளையிடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, இவற்றில் 162 ஆடைகள் மீட்க்கப்பட்டுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.