நாட்டில் அதிகளவான கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் நேற்று (21) கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகினர்.
கொவிட் 19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 822 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் 674 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 287 பேர் களுத்துறை மாவட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளனர்.
குருநாகலில் 248 பேரும், காலியில் 182 பேரும், இரத்தினபுரியில் 190 பேரும், ஹம்பாந்தோட்டையில் 117 பேரும், திருகோணமலையில் 204 பேரும், கண்டியில் 85 பேரும், மாத்தளையில் 45 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
அத்துடன், பதுளையில் 60 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 84 பேருக்கும், கேகாலையில் 97 பேருக்கும், அநுராதபுரத்தில் 58 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.