மன்னாரில் கேரள கஞ்சா மீட்பு

IMG 20210521 WA0005 1
IMG 20210521 WA0005 1

மன்னார் பேசாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மன்னார்,காட்டாஸ்பத்திரி பேசாலை,பிரதேசத்தில் வைத்து கேரள கஞ்சா 5 கிலோ 575 கிராம் பேசாலை காவல்துறையினரால் நேற்று (20)மாலை கைப்பற்றபட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில், உதவி காவல் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி,மற்றும் பேசாலை காவல் நிலைய பொறுப்பதிகாரி சோமயித் தலைமையிலான அணியினரே மேற்படி கேரள கஞ்சாவினையும் அதனைத் தன்வசம் வைத்திருந்த காட்டாஸ்பத்திரியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரினையும் கைது செய்து உள்ளனர்

கைப்பற்றப்பட்ட கஞ்சா,மற்றும் சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின் இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.