யாழ்பல்கலை பழைய மாணவர்களுக்கான ஒன்றுகூடல்

Jaffna
Jaffna

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறிய அனைவரும் பல்கலைக்கழக நிருவாகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பழையமாணவர் சங்க ஒன்று கூடலில் பங்கு கொள்ளுமாறு மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

பழைய மாணவர்களைப் பொறுத்த மட்டில் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஏதுநிலை கடந்த இருபது ஆண்டுகளாக பழையமாணவர் சங்கம் தொழிற்படாமல் இருந்த நிலையில் சாத்தியமாகவில்லை.

பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் பல்வேறு வகைகளிலும் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் பங்களிப்பு செய்யமுடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று உயர்பதவிகளில் உள்ளவர்களது பங்களிப்புக்கள் பல்கலைக்கழகத்திற்கும் பட்டதாரிகளின் எதிர்காலத்திற்கும் தேவை.

ஆகவே பல்கலைக்கழக நிருவாகத்திற்கு ஊடாக ஒருங்கமைத்துள்ள பழையமாணவர் சங்க ஒன்று கூடலில் பங்கு கொள்ளுமாறு அனைத்து பழைய மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பழைய மாணவர் சங்கத்தினை மீளச் செயற்படுத்துவதற்கான ஒன்றுகூடல் எதிர்வரும் 21/12/2019 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு விஞ்ஞான பீட பௌதீகவியல் விரிவுரை மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.