மன்னாரில் கடும் காற்றினால் 59 பேர் பாதிப்பு

CYCLONE WEATHER RAINS WIND HURRICANE 768x384 1
CYCLONE WEATHER RAINS WIND HURRICANE 768x384 1

மன்னார் மாவட்டத்தில் நேற்று (25) கடும் காற்றின் காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கணகரட்னம் திலீபன் தெரிவித்தார்.

மேலும் இம் மாவட்டத்தில் 13 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2 சிறிய கடைகளும் சேதமடைந்துள்ளன. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகளும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகளும், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகளும், மடு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு  வீடும் சேதமடைந்துள்ளன.

மேலும் மன்னார் எருக்கலம்பிட்டி மற்றும் கொக்குப்படையான் கிராமத்தில் தலா ஒவ்வொரு கடைகள் சேதமடைந்துள்ளதாக  மன்னார் மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ உதவி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.