நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் மேல் மாகாணத்தில் நாளாந்தம் 1000 க்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 573 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை இம்மாவட்டத்தில் இதுவரை 47,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 530 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை இம்மாவட்டத்தில் இதுவரை 31,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் களுத்துறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 128 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை இதுவரை 15,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.