நாட்டில் இணைய சேவைகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலை தொடர்பில் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் கல்வி நடவடிக்கைகளும் அலுவலக நடவடிக்கைகளும் இணையத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படுகின்றது.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் இன்றியமையாதது என தெரிவித்துள்ளத் குறித்த சங்கம், அதனைச் சரியான தரத்தில் பெற்றுக்கொடுப்பது அரசின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்குத் தேவையான விரைவான இணைய வசதிகளை நாட்டு மக்களுக்கு வழங்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம், இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.