தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடும் – சுதர்சினி

Sudarshani Fernandopulle 1 700x375 1
Sudarshani Fernandopulle 1 700x375 1

நாடளாவிய ரீதியில் யூன் 14ஆம் திகதியின் பின்னர் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் 14 நாட்கள் நிறைவடைந்ததன் பின்னரே கொரோனா தொற்று பரவல் குறைவடையும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.