மட்டக்களப்பில் மேலும் இரு பிரிவுகள் விடுவிப்பு

1555840568 Curfew in Sri Lanka 2
1555840568 Curfew in Sri Lanka 2

மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட கிரான்குளம், கிரான்குளம் மத்தி ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளை விடுவிக்க தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு இன்று (28) பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்

பி.சி.ஆர்  பரிசோதனையில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிரான்குளம், கிரான்குளம் மத்தி ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளிலும் கண்டறியப்பட்டதையடுத்து அந்த இரு கிராம சேவகர் பிரிவுகளும்  கடந்த 14 ம் திகதி தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது.

இந்த நிலையில் முடக்கப்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்த பகுதியில் தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படாத நிலையில் முடக்கப்பட் இரு கிராமசேவகர் பிரிவுகளை திறப்பதற்கு இன்று முடிவு செய்து அதற்கான பரிந்துரைகளை தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்