தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படவில்லை

market 1
market 1

அரசாங்கம் வெளியிட்டிருந்த அறிவிப்புக்கமைய காய்கறிகளை வாங்கவும் விற்கவும் தம்புள்ளை பொருளாதார நிலையத்துக்கு வந்த அனைவரும் திரும்பி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக விவசாயிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்த விற்பனையாளர்கள், பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பொருளாதார நிலையங்கள், மூன்று நாட்களுக்கு திறந்திருக்கும் என்று நேற்று (28) அரசாங்கம் அறிவித்துள்ளதாக தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாக அறிந்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

குறித்த தகவலுக்கமையவே தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு நாம் இன்று வந்தோம். ஆனால் மூடப்பட்டு காணப்படுகின்றது என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், விவசாயிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் பல மணிநேரம் அங்கேயே காத்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.