அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம்

gmoa 1
gmoa 1

மொரட்டுவை சுகாதார மருத்துவ அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக தற்போது விளக்கமறியலில் உள்ள மொரட்டுவை நகரசபை முதல்வர் சமன் லால் பெர்னாண்டோ குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இக்கடிதத்தில் அரசியல்வாதிகளின் தேவையற்ற தலையீடு மற்றும் அழுத்தத்தை தொழிற்சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.

அதன்படி, தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் கொரோனா தொடர்பான ஏனைய சட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் மொரட்டுவை நகரசபை முதல்வரின் செயற்பாட்டை எமது சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

எனவே இனிவரும் காலங்களில்  அரசியல்வாதிகளின் தேவையற்ற தலையீடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.