நாட்டில் இன்று திறக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் நாளையும் திறந்திருக்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மொத்த வியாபாரத்துக்காக மாத்திரமே பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனுமதிப்பத்திரம் அல்லது அனுமதி பெற்ற நடமாடும் வாகன உரிமைாளர்கள், மத்திய நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்து, அவற்றை வீடுகளுக்கு விற்பனை செய்ய முடியும் என்றும் அவர் அறிவித்தார்.
எனினும், இந்த வர்த்தகர்கள் பிரதேச செயலகத்தினூடாக அனுமதி பெற்றிருத்தல் அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, நாளை முதல் நாட்டிலுள்ள அனைத்து சதொச நிறுவனங்களும் திறக்கப்படவுள்ளன.
எனினும், சில்லறை விற்பனை இடம்பெற மாட்டாது என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பிரதேச செயலாளர், அரச நிறுவனங்கள் மற்றும் நடமாடும் பொருள் விற்பனையாளர்களுக்காக மாத்திரம் சதொச நிறுவனங்கள் திறப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.