முல்லைத்தீவு மாத்தளன் மற்றும் இரணைப்பாலை பகுதிகளை சேர்ந்த சாலை சிறுகடலில் இறால் பிடித்து வரும் மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது நால்வர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஜவர் முல்லைத்தீவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மேலும் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்