கஞ்சாவுடன் ஒருவர் கைது

kaithu
kaithu

கொலொன்னாவை பிரதேசத்தில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 129 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனஹேன காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (31) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 37 வயதான சந்தேக நபர் தெமட்டகொட – வேலுவன பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.