முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு

teachers union
teachers union

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 250 ரூபா மேலதிக கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இன்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மெய்நிகர் ஊடகசந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

இந்த கொடுப்பனவு அதிகரிப்பானது இன்று(01) முதல் அமுலாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.