திருக்கோவில் காவல் நிலையத்தில் 11 பேருக்கு கொரோனா

corona 2
corona 2

திருக்கோவில் காவல் நிலையத்தில் கடமையாற்றும் 38 காவற்துறையினருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (01) அன்டிஜன் பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது இதனையடுத்து தற்காலிகமாக காவல் நிலையம் பூட்டு என காவற்துறையினர்  தெரிவித்தனர்.


திருக்கோவில் பிரதேச வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று செவ்வாய்கிழமை திருக்கோவில் காவல் நிலையத்தில் கடமையாற்றும் 38 காவற்துறையினருக்கு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டதில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இதனையடுத்து குறித்த கொரோனா தொற்றாளர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தற்காலிகமாக காவல் நிலையத்தை பூட்டி கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு காவல் நிலையத்தை மீண்டும்  திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.