இலங்கையில் மேலும் 43 பேரைசாகடித்தது கொரோனா வைரஸ்- மொத்தக் காவு 1,527 ஆக உயர்வு

new york coronavirus 7 1589245808
new york coronavirus 7 1589245808

இலங்கையில் மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,527 ஆக அதிகரித்துள்ளது.

மே 20ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி (நேற்று) வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

அந்தவகையில், மே 20ஆம் திகதி ஒருவரும், 21ஆம் திகதி ஒருவரும், 23ஆம் திகதி ஒருவரும், 25ஆம் திகதி இருவரும், 26ஆம் திகதி இருவரும், 27ஆம் திகதி மூவரும், 28ஆம் திகதி ஆறு பேரும், 29ஆம் திகதி ஒன்பது பேரும், 30ஆம் திகதி 15 பேரும், 31ஆம் திகதி இருவரும், ஜூன் 01ஆம் திகதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 12 பெண்களும், 31 ஆண்களும் அடங்குகின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் 30 – 39 வயதுக்குட்பட்டவர்கள் இருவரும், 40 – 49 வயதுக்குட்பட்டவர்கள் இருவரும், 50 – 59 வயதுக்குட்பட்டவர்கள் ஆறு பேரும், 60 – 69 வயதுக்குட்பட்டவர்கள் 16 பேரும், 70 – 79 வயதுக்குட்பட்டவர்கள் பத்து பேரும், 80 – 89 வயதுக்குட்பட்டவர்கள் ஆறு பேரும், 90 – 99 வயதுக்குட்பட்டவர்கள் ஒருவரும் அடங்குகின்றனர்.

உயிரிழந்த 43 பேரில் ஏழு பேர் வீட்டிலும், மிகுதி 36 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் உயிரிழந்துள்ளனர் என்றும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.