யாழில் திருட்டினை கட்டுப்படுத்த காவற்துறையினரால் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுப்பு!

20210602 185331
20210602 185331

யாழ் குடாநாட்டில் திருட்டினை கட்டுப்படுத்த காவற்துறையினரால் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில்  திருட்டு சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் காவற்துறையினர் பாதுகாப்பு தரப்பினர் திருட்டினைை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

20210602 185441

 திருட்டினை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ  தலைமையில் யாழ்குடா நாட்டு வீதிகளில் காவற்துறையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது

20210602 190112

 யாழ்ப்பாண காவல் நிலைய மோட்டார் சைக்கிள் அணியினர் மாலை வேளைகளில் வீதிகளில் சந்தேகத்திற்கிடமாக பயணிப்போரை சோதனையிட்டதுடன் பயணிக்கும் வாகனங்களையும் சோதனை இடம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
அத்தியாவசிய சேவை தவிர்நது தேவையற்ற விதத்தில் வீதியில் பயணித்தவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

அண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் மூடப்பட்டிருந்த கடைகள், பாடசாலைகள் ,தேவாலயங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது